பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் விடுவிப்பு 

தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டரூ.6.16 லட்சம் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின் தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டதாக ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்/;

Update: 2024-03-28 02:31 GMT

ஆட்சியர் தீபக் ஜேக்கப் 

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக, தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி முழுவதும், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை 24 மணிநேரமும் கண்காணிப்பதற்கென 72 பறக்கும் படைக் குழுக்களும், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 8 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில், மார்ச்.26 செவ்வாய் அன்று தஞசாவூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படைக் குழு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது கனரக வாகனத்தை சோதனை செய்ததில், பேராவூரணி தேர்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக  ரூ.60,670/- ரூ.2,73,045,/- ரூ.2,22,650/-   மற்றும்  ரூ 60,120/- என மொத்தம் ரூ.6 லட்சத்து16 ஆயிரத்து 485  பறிமுதல் செய்யப்பட்டு சார்நிலை கருவூலங்களில்  ஒப்படைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து  சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் படியும் தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு  தொகை உடனடியாக விடுவிக்கப்பட்டது.   தேர்தல் நடத்தை விதி முறைகள்  அமலில் உள்ளதால்  உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட பணம் மற்றும்  பொருட்கள் மாவட்ட மேல்முறையீடு குழுவில் உரிய ஆவணங்களை சமர்பித்து  விடுவித்துக்கொள்ள  ஏதுவாகவும்,  பொதுமக்களுக்கு இடையூறு  ஏற்படாத வகையிலும், மாவட்ட அளவில் தினசரி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என  மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News