பெரம்பலூர் : தென் மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கல்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு ஊரக வளர்ச்சி மகமை சார்பாக நிவாரண பொருட்களை கலெக்டர் அனுப்பி வைத்தார்

Update: 2023-12-23 11:54 GMT

பெரம்பலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கல்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, டிசம்பர் 22ஆம் தேதி இரவு 8 மணி அளவில், அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட 14 உணவு பொருட்கள் அடங்கிய, ரூபாய் 5 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான 533 தொகுப்புகள் , மற்றும் ரூ.15,000 மதிப்பிலான காய்கறிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வாகனம் மூலம் அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News