ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் தூத்துக்குடி பயணம்

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் சார்பாக ரூபாய் 10 லட்சம் மதிப்பெண் நிவாரண பொருட்களை தூத்துக்குடிக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அனுப்பி வைத்தார்

Update: 2023-12-20 03:54 GMT

ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் தூத்துக்குடி பயணம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் கொண்ட கனரக வாகனங்களை, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , மயிலாடுதுறை நகராட்சி தலைவர் செல்வராஜ் , மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜகணேஷ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்தான கிருஷ்ணன் அவர்கள், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், உமாசங்கர், குத்தாலம் வட்டாட்சியர் சித்ரா மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் முருகேசன் அவர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News