எஸ்டிபிஐ கட்சி சார்பில் 10 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள்

தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 10 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

Update: 2023-12-27 05:33 GMT

நிவாரண பொருட்கள் 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி மக்கள் சுமார் 2 லட்சம் பேர் தங்களது வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இதை அறிந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலமாக பல உணவு மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு வந்து வழங்கி வருகிறார்கள்.

இதில் தூத்துக்குடி நகரத்தில் உள்ள மக்களுக்காக மதர் பைரோஸ் டிரஸ்ட் டார்வின் சார்பில் இந்திய ஜனநாயக கட்சி திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் முத்தம்மாள் காலனி, தாளமுத்து நகர், சிலுவைபட்டி பகுதியில் வசிக்கும் 10ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் போர்வை, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மின்னல் அம்ஜத், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஷாஜகான், தேசியவாத காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சையது அலி, அண்ணா சங்குகுளி சங்கத்தின் தலைவர் இசக்கிமுத்து சின்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News