விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

மதுராந்தகம் அருகே விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Update: 2024-03-12 17:30 GMT
மதுராந்தகம் அருகே விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோத்துப்பாக்கத்தில் இருந்து தனியார் பேருந்து மதுராந்தகம் நோக்கி சென்ற பொழுது சிறுநாகலூர் என்ற இடத்தில்முன்னாள் சென்ற லாரி மீது தனியார் பேருந்து உரசி கொண்டதால் பின்னால் படியில் தொங்கி இருந்த தனியார் கல்லூரி மாணவர்கள் ராமாபுரம் பகுதியை சேர்ந்த கமலேஷ் சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்த மோனிஷ் மோகல்வாடிபகுதியை சேர்ந்த தனுஷ் மூன்று பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலி ஒருவர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி மோகல்வாடிபகுதியை சேர்ந்த ரஞ்சித் பலியானார்.

இந்த துயர சம்பவம் அறிந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

Tags:    

Similar News