தஞ்சாவூரில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தஞ்சாவூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-01-31 13:08 GMT


தஞ்சாவூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது


தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு நாளில், மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்டப் பொருளாளரும், மாநகரத் தலைவருமான ஹெச். அப்துல் நசீர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். 

இதில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச்செயலாளர்,  பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.குருசாமி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் பி.எம்.ஜெய்னுல் ஆபிதீன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலாவுதீன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் இரா.விஜயகுமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ப.சத்யநாதன் கலந்து கொண்டு பேசினர்.  முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மக்கா மஸ்ஜித் முஹம்மது பாரூக், ஜக்கரியா, அத்தர் மஹல்லா முஹம்மது பாரூக், பாம்பாட்டி தெரு நசீம், ஜூம்ஆ பள்ளிவாசல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News