குடியரசு தின விழா - தேசிய கொடியேற்றிய ஆட்சியர்

வேலூரில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.9. 68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2024-01-26 08:21 GMT

குடியரசு தின விழா 

 வேலூர்மாவட்டம்,வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு தேசிய கொடியினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்தார் இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் காவலர்கள் சாரணர் இயக்கம் தேசிய மாணவர் படை ஆகியோர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுகொண்டார் தியாகிகளும் கௌரவிக்கப்பட்டனர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு சான்றுகள் பதக்கங்கள் வழங்கப்படது மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.9. 68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் குமாரவேல் பாண்டிய பயனாளிகளுக்கு வழங்கினார்
Tags:    

Similar News