குடியரசு தினம் : மாணவர்கள் கலை நிகழ்ச்சி ஒத்திகை

குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-25 02:54 GMT

ஒத்திகையில் ஈடுபட்ட மாணவிகள் 

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா நடைபெறுகிறது. இதனால் மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குடியரசு தின விழாவில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். அன்றைய தினம் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதேபோல் குடியரசு தினத்தை முன்னிட்டு குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதனத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News