குடியரசு தினம் : காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணி ஆய்வு

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாணவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படவுள்ள காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-01-26 02:19 GMT

ஆய்வு 

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாணவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படவுள்ள காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணி நாகையில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெறுவதையொட்டி மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின்பெயரில்  இன்று ( 26.01.24 ) அதிகாலை 04.00 மணிக்கு நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வுசெய்தார். சுகாதாரமாக, பாதுகாப்புடன் உணவு தயாரிப்பு பணி நடைபெற வேண்டுமென அங்கிருந்த பணியாளர்களிடம் உத்தரவிடப்பட்டது.
Tags:    

Similar News