அத்தியூத்து சாலைப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

அத்தியூத்து சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-30 03:33 GMT

அத்தியூத்து சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

தென்காசி - திருநெல்வேலி நான்குவழிச் சாலைக்கான பணிகள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இதில், அத்தியூத்து - சுரண்டை சாலை சந்திப்புப் பகுதியில் தொடா்ந்து செல்லும் கனரக வாகனங்களால் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினா் உடனடியாக பராமரிக்காததால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா் அந்தப் பள்ளத்தில் தேங்கி சேறும் சகதியுமாக மாறி துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதில், வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கிக் காயமடையும் நிலை உள்ளது. கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்களின் நலன் கருதில், சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News