கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க கோரிக்கை

மறவமங்கலம் கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-12-31 07:23 GMT

மனு அளிக்க வந்த விவசாயி 

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் 3,700 உறுப்பினர்கள், 6 ஊராட்சிகள் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் கடன் பெற, உரம் வாங்க மிகுந்த நெருக்கடியாக உள்ளதால் மறவமங்கலம் மற்றும் வேளாரேந்தலில் ஆகிய பகுதிகளை தலைமையிடமாக கொண்டு கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News