இரணியலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி பா.ஜ ஆர்ப்பாட்டம்

இரணியலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-09 01:56 GMT
ஆர்ப்பாட்டம் நடத்திய பா ஜ -வினர்

குமரி மாவட்டம்  இரணியல் ஜங்ஷன் பகுதியில்  அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதால் கடையை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இரணியல் பேரூராட்சி கவுன்சில் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.          இந்த நிலையில் சம்மந்தபட்ட  அரசு டாஸ்மாக் கடையை அகற்ற கோரி இரணியல் பேரூர்  பா.ஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது.    

 இரணியல் பா.ஜ தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.  எம்.ஆர் காந்தி எம் எல் ஏ, இரணியல் பேரூராட்சி தலைவர் ஸ்ரீகலா முருகன், பா.ஜ மாவட்ட செயலாளர் குமரி பா.ரமேஷ்,  மாநகராட்சி கவுன்சிலர் ஐய்யப்பன், இரணியல் பேரூராட்சி துணைத் தலைவர் பகவத்கீதா, கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News