சிதிலமடைந்த தண்ணீர் தொட்டியை சரிசெய்ய கோரிக்கை

சேர்வாம்பட்டி கிராமத்தில், சிதிலமடைந்து காணப்படும் தண்ணீர் தொட்டியை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-12-29 07:51 GMT

சிதிலமடைந்த தண்ணீர் தொட்டி 

எலச்சிபாளையம் ஒன்றியம், சின்னமணலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட, சேர்வாம்பட்டி கிராமத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்சமயம் இத்தொட்டி ஆங்காங்கே சிலாப் கற்கள் உதிர்ந்து சிதிலமடைந்து காணப்படுகின்றது. இதனால், எந்நேரம் வேண்டுமானாலும் தொட்டி இடிந்து கீழே விழலாம். அவ்வாறு விழுந்தால் மக்கள் மீது விழுந்து உயிர்பலிப்புடன் நேரலாம். ஆகவே ஆபத்து நேரும் முன்னரே சிதிலமடைந்து காணப்படும் தொட்டியை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News