சேதமடைந்த சமுதாயக் கூடத்தை சீரமைக்க கோரிக்கை

Update: 2023-12-05 03:23 GMT

சேதமடைந்த சமுதாயக் கூடம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செங்கல்பட்டு மாவட்டம்,பவுஞ்சூர் அருகே நெடுமரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலனி பகுதியில், மாரியம்மன் கோவில் அருகே சமுதாய நலக்கூடம் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நெடுமரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது குடும்பங்களில் நடக்கும் பிறந்த நாள், காதணி விழா போன்ற சுப நிகழ்ச்சிகளை, இந்த சமுதாய நலக்கூடத்தில் நடத்தி வருகின்றனர். மேலும், மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களின் கல்விக் கூடமாகவும் செயல்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது சமுதாய நலக்கூடம் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News