குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க கோரிக்கை

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-23 08:25 GMT

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தென்காசி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் காவையா தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷேரை அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் அதில் கூறியிருப்பதாவது: குற்றாலத்தில் சாரல் சீஸன் காலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து அருவிகளில் வெள்ளம் அதிகமாக வரும்போது பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க காவல்துறை மூலம் தடை விதிக்கப்படும். பின்னர் வெள்ளம் குறைந்த பின்னர் மீண்டும் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

சமீபத்தில் வானிலை ஆய்வு மையம் தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது பின்னர் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது இந்த நிலையில் குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்த போதிலும் குளிக்க அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் கடந்த 6 நாட்களாக அறிவித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

மேலும் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையை நம்பி கடை நடத்தும் குத்தகைதாரர்கள், விடுதி உரிமையாளர்களின் வாழ்வாராதம் பாதிக்கப்படுவதாகவும் இதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றுலாப்பயணிகள் வருகையை நம்பி 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

Tags:    

Similar News