கெங்கவல்லி அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

கெங்கவல்லி அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2024-01-21 12:59 GMT
மலை பாம்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஜங்கமசமுத்திரத்தை சேர்ந்தவர் சக்தி, 42. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, அவரது வீட்டில் பெரிய அளவில் பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அவர் தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்லபாண்டியன்(பொ) தலைமையில் வீரர்கள், இரவு, 10:30 மணிக்கு வந்து பார்த்தபோது மலைப்பாம்பு என தெரிந்தது.ஒரு மணி நேரத்துக்கு பின், அந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். பின், 12 அடி நீள பாம்பை, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News