குளத்துாரில் குடிகள் மாநாடு

புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் பகுதியில் வருவாய் தீர்பாயம் இறுதியில் குடிகள் மாநாடு நடைப்பெற்றது.

Update: 2024-06-29 03:34 GMT

குடிகள் மாநாடு

கீரனுார்: குளத்துார் தாலுகா அலுவலகத்தில் 1433ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி நிறைவாக குடிகள் மாநாடு நடந்தது. தாசில்தார் கவியரசன் வரவேற்றார். இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி சிறப்பு விருந்தி னராக பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து பெறப் பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட பயனாளிக ளுக்கு பட்டா மாறுதல், நிவாரண உதவித்தொகை, 'குடும்ப அட்டை உள்ளிட்டவற்றுக்கான ஆணைகளை வழங்கினார். கிராமப்புறங்களில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டால் அதுபற்றி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உடனடியாக தொலைபேசி எண் 10581ல் அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தனி தாசில்தார் செல்வ விநாயகம்,ஆர்டிஓ நேர் முக உதவியாளர் பழனிச்சாமி மற்றும் வருவாய் துறை ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News