தென்காசி அருகே இரவு தொடர் மின்தடை பொதுமக்கள் அவதி

தென்காசி அருகே இரவு தொடர் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2024-05-28 03:31 GMT
தென்காசி அருகே இரவு நேரத்தில் தொடர் மின்தடை பொதுமக்கள் அவதி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் மதினாநகர், கிரசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியத்திலிருந்து மின் தடை அடிக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அங்கு சில வீடுகளில் தொடர்ந்து மின்தடை உள்ளது. இது குறித்து மின்வாரிய நிர்வாகி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இரவு வரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிய வருகிறது . இதனால் இரவு வரை இந்தப் பகுதி மக்களுக்கு சிரமம் நீடித்தது. மின் சார்ந்த அதிகாரிகள் உடனே வந்து பகுதியை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு மின்தடை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News