ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பதவி ராஜினாமா

Update: 2023-12-08 08:27 GMT

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பதவி ராஜினாமா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் வீரசின்னம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 1வது வார்டு உறுப்பினர் மாலதி 31, தனது பதவியை ராஜினாமா செய்து கலெக்டர் அலுவலகத்தில் கடிதம் வழங்கினார்.சாணார்பட்டி ஒன்றியம் வீரசின்னம்பட்டி ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் மாலதி. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த இவர் வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கலெக்டர் பூங்கொடியிடம் கடிதம் அளிக்க வந்த நிலையில், கலெக்டர் இல்லாததால் அலுவலக பணியாளர்களிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
Tags:    

Similar News