வளர்ச்சி திட்ட பணிகள் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

பாபநாசத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

Update: 2024-07-02 04:40 GMT

பாபநாசத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.


பாபநாசத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருராட்சி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் பேரூராட்சி துணை தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி உதயக்குமார் முத்து மேரி மைக்கேல்ராஜ் ஜாபர்அலி புஷ்பா சக்திவேல் கீர்த்திவாசன் சமீரா பர்வீன் முஹம்மது ரஃபீக் பிரேம்நாத் பைரன் பாலகிருஷ்ணன் பிரகாஷ் விஜயா கணேசன் கெஜலெட்சுமி செல்வமுத்துகுமரன் கோட்டையம்மாள் பெருமாள் துரைமுருகன் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சியில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது எனவும் பாபநாசம் பேருராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற தமிழக அரசே கேட்டுக்கொள்வது எனவும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Tags:    

Similar News