மனுக்களுக்கு ஒரு வாரத்தில் தீர்வு - மாவட்ட ஆட்சியர் உறுதி

சிவகங்கை மாவட்ட வருவாய்த் தீா்வாயங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு ஒரு வாரத்துக்குள் தீா்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

Update: 2024-06-23 02:50 GMT

மனுக்களுக்கு ஒரு வாரத்தில் தீர்வு 

திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட கொந்தகை உள்வட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் கலந்து கொண்டு, திருப்புவனம் வருவாய்க் கிராமங்களான கொந்தகை உள்வட்டம், கீழடி, மணலூா், டி.கரிசல்குளம், பொட்டபாளையம், கொந்தகை கிழக்கு, கொந்தகை மேற்கு, வெள்ளுா், கலுவன்குளம், காஞ்சிரங்குளம், சயனாபுரம், சொட்டதட்டி, எருக்கலை வெள்ளுா், முக்குடி, செங்குளம், அம்பலத்தாடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிய பயன்களை பயனாளிகளுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

Tags:    

Similar News