கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த வருவாய் அலுவலர்கள்

நெல்லை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

Update: 2024-02-21 02:05 GMT

கருப்பு பட்டையுடன் பணி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வருவாய்த் துறை ஊழியர்களிடம் பல்வேறு கெடுபிடிகளை செய்து வருவதாகவும், இரவு,பகல் பாராமல் பணியாற்றி வரும் ஊழியர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி சிறு தவறுகளுக்கு கூட 17 பி போன்ற அதிகபட்ச தண்டனை விதிப்பதாகவும் கண்டனம் தெரிவித்து நேற்று வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். இதனால் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News