நாட்றம்பள்ளி அருகே அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

நாட்றம்பள்ளி அருகே சாலை வசதி செய்து தரகோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-18 13:05 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி பஞ்சாய்த்திற்குட்பட்ட பொன்மலைநகர் பகுதியில் இருந்து பழையவூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் சாலைவசதி செய்து தரக்கோரி பொன்மலை நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை பஞ்சாயத்து,

தலைவர் இளையராஜாவிடம் புகார் அளித்தும் அந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொன்மலைநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று பொன்மலை நகர் பகுதியில் உள்ள திருப்பத்தூரில் இருந்து மல்லானூர் செல்லும் சாலையில் சாலைவசதி செய்து தரக்கோரி திடீரென 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல் நிலைய போலீசார் மற்றும் வட்டாட்சியர் குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News