ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய கோரி சாலை மறியல்

செய்யாறு அருகே கடுகனூரில் பொங்கல் தொகுப்பு கூப்பன் பறிப்பு குறித்து தகவல் சொன்ன வாலிபரை கத்தியால் வெட்டிய ஊராட்சி மன்றத்தலைவரை கைது செய்ய கோரி நாவல்பாக்கம் கூட்டு சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-10 11:58 GMT

சாலை மறியல் 

செய்யாறு அருகே கடுகனூர் பகுதியில் பொங்கல் பரிசு கூப்பன் விநியோகம் தொடர்பாக அனைவருக்கும் தகவல் கொடுத்ததாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாவல்பாக்கம் கூட்டு சாலையில் கடுகனூர் பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர். மேலும் கடுகனூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News