சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

தென்காசி மாவட்டத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையோட்டி சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-01-21 10:48 GMT
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தேசிய சாலைப் பாதுகாப்பு மாதவிழா 15.01.24 தொடங்கி 14.02.24 வரை நடைபெறுகிறது.இதையொட்டி சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன் தலைமை வகித்தாா்.

மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ,ஒன்றியக்குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன்,ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தொடக்கி வைத்தாா். பேரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.இதைத்தொடா்ந்து பேரணி பிரதானசாலை வழியாக சுவாமி சன்னதியை வந்தடைந்தது.

Tags:    

Similar News