மேட்டூரில் சாலை வார பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டது

சேலம் மாவட்டம், மேட்டூரில் சாலை வார பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-02-16 08:46 GMT


சேலம் மாவட்டம், மேட்டூரில் சாலை வார பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டது.


மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. அப்போது பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பாக தெருக்கூத்து பம்பை உள்ளிட்ட கிராமிய கலைஞர்களைக் கொண்டு எமதர்மன் வேடமிட்டும் சித்ரகுப்தன், அரக்கன், அரக்கி உள்ளிட்ட வேடமணிந்து கையில் பாச கயிறுயுடன் சாலையில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் மேட்டூர் வட்டார போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் உயிர்க்கவசம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கிராமிய நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்களும் பயணிகளும் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News