சாலை மறியல்

சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.

Update: 2024-07-04 05:07 GMT

  சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டிரான்ஸ்பார்மர் வெடித்ததாகவும் தற்பொழுது வரை சரி செய்யப்படாததால் இனாம் சமயபுரம் முழுவதும் இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் தற்போது இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள பழுதான ட்ரான்ஸ்பார்மர் இரவோடு இரவாக சரி செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினார்.
Tags:    

Similar News