சாலை மறியல் போராட்டம்

நத்தம் அருகே கோமணாம்பட்டி பிரிவில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-17 08:19 GMT

நத்தம் அருகே கோமணாம்பட்டி பிரிவில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சாத்தாம்பாடி ஊராட்சியில் கோமணாம்பட்டி கிராமம் உள்ளது. இது நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 2 கி.மீ தூரம் உள்ளே அமைந்துள்ளது. கோமணாம்பட்டி பிரிவு முதல் கோமணாம்பட்டி வரை 4 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலை போடப்பட்ட சில மாதங்களே ஆன நிலையில் சேதம் அடைந்ததாகவும், 4 ஆண்டுகளாகியும் சரி செய்யப்படவில்லை, எனக் கூறி சேதமடைந்துள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி அரசு பேருந்ததை சிறைபிடித்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News