சாலையோர வியாபாரிகள் சங்க கிளை கூட்டம்

கிளை கூட்டம்பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின்,கிளை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-02-10 01:06 GMT

சங்க கிளை கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின், பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய கிளை கூட்டம் கிளை தலைவர் முருகன் தலைமையில் பிப்ரவரி 9ம் தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கிளை செயலாளர் குணசேகரன், கிளை பொருளாளர் ராமசாமி கிளை நிர்வாகிகள் வெள்ளையம்மாள் ஆகியோர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்.

அதில் பிப்- 16ஆம் தேதி நடைபெற உள்ள மறியல் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து சிஐடியு மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகி போர் உரையாற்றினார்கள். கூட்டத்தில் வருகின்ற 16ஆம் தேதி நடைபெறக்கூடிய மறியல் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வதும் என்றும் கடையடைப்பு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பெரம்பலூர் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையால் அவ்வப்போது கடையை அப்புறப்படுத்தும் என்று அறிவிப்பை கைவிட வேண்டும்.

தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்றும் . பெரம்பலூர் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், பெரம்பலூர் நகரில் நடைபெறும் தொடர் திருட்டை தடுக்க வேண்டும் எனவும், வலியுறுத்தியு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின், நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News