பழனி மலைக்கோவிலில் நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்

பழனி மலைக்கோவிலில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே 30) ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது.

Update: 2024-05-29 13:33 GMT

 பழனி மலைக்கோவிலில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே 30) ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. 

மே 30ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழநி மலை கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி மே 30-ம் தேதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை அன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதையைப் பயன்படுத்தி மலைக்கோயிலுக்குச் செல்லுமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News