ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் கைது - போலீசார் விசாரணை
ரூ.18 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-09 13:45 GMT
கோப்பு படம்
காரைக்குடி ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் மெய்யப்பன். இவர் அரியக்குடி தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். அந்த தோட்டத்தின் அருகே 5.86 ஏக்கரை கிரையம் செய்து தருவதாக சோமசுந்தரம் என்பவரிடம் 18 லட்சம் பெற்றுள்ளார்.
பல மாதங்கள் ஆகியும் பணத்தையும், இடத்தையும் திரும்ப தராததால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் மெய்யப்பன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்