ரூ. 5 கோடியில் புதியதாக கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா - எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 15வது நிதி ஆணையம் சுகாதார மானியம் நிதியில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

Update: 2024-02-25 12:09 GMT

 அடிக்கல் நாட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 15வது நிதி ஆணையம் சுகாதார மானியம் நிதியில் ரூ. 5 கோடியில் புதியதாக கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியை காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல், நகராட்சி பொறியாளர் சிசீல்தாமஸ், பணி மேற்பார்வையாளர் நந்தகுமார், முதன்மை மருத்துவ அலுவலர் பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், செந்தில் சௌந்தரபாண்டியன், கார்த்திகேயன் திமுக நிர்வாகிகள் ரவிக்குமார், ராம் ரவி, விஜய் பாஸ்கர், சின்னதுரை, துரைசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News