கற்பக விநாயகம் மேலாண்மை நிலையத்தில் சாதனா போட்டிகள்!

புதுக்கோட்டை கற்பக விநாயகா மேலாண்மைக் கல்வி நிலையத்தில் 15வது 'சாதனா’ கல்லூரி விழா நடைபெற்றது.

Update: 2024-03-23 06:18 GMT

புதுக்கோட்டை கற்பக விநாயகா மேலாண்மைக் கல்வி நிலையத்தில் 15ஆவது 'சாதனா’ கல்லூரி விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை ஜெஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா மேலாண்மைக் கல்வி நிலையத்தில் 15ஆவது 'சாதனா' (மேலாண்மை மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான போட்டிகள்) நடைபெற்றன. போட்டியை கல்வி நிறுவன அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் அனிதா ராணி ஒருங்கிணைக்க, விநாடிவினா, தம் திறமை வெளிப்படுத்துதல், விளம்பரப் போட்டி மற்றும் சிறந்த மேலாளர் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதிகப் புள்ளிகள் எடுத்து, சுழற்கோப்பையை ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெற்றனர். போட்டியில் பங்கேற்றோருக்கு ஜெஜெ கல்லூரி முதல்வர் ஜ. பரசுராமன் பரிசு, சான்றிதழ்களை வழங்கிப்பாராட்டினார். பேரா. ஜெனிபா மேரி தொடங்கிவைத்துப் பேசினார். பேரா. சாமிநாதன் ஒருங்கிணைத்தார்.
Tags:    

Similar News