சாய் ஆலய 3ம் ஆண்டு வருடாபிஷேக விழா!

சாய் ஆலய 3ம் ஆண்டு வருடாபிஷேக விழாவில் பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைப்பு.

Update: 2024-03-22 06:47 GMT

ஸ்ரீ சீரடி சாய்பாபா

திண்டுக்கலில் நாகல் நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. பாபா ஆசியுடனும், பக்தர்களின் பேராதரவுடனும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அன்னதானம் கூடம் திறப்பு விழா மற்றும் 3ம் ஆண்டு வருடாபிஷேக விழா வருகின்ற மார்ச் மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது. பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
Tags:    

Similar News