போதைப் பொருட்கள் விற்பனை

தக்கலை சுற்று வட்டார பகுதிகளில் போதை பொருள் விற்பனை செய்ததாக ஐந்து பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-28 03:14 GMT

போதைப்பொருள் விற்பனை

தக்கலை சுற்றுவட்டார பகுதிக ளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படு வது குறித்து போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டதில், 5பேர் சிக்கி னர். தக்கலை போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தக்கலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதைபொருட்கள் விற்பனை குறித்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், தக்கலை - இரணியல் ரோடு, சேவியர்புரம்,கவிய லுார், பாலப்பள்ளி உள் ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய் யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றைபறி முதல் செய்து 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Tags:    

Similar News