சேலத்தில் வீடு அட்வான்ஸ் கொடுப்பதில் தகராறு - இரண்டு பேர் கைது

சேலத்தில் வீடு அட்வான்ஸ் கொடுப்பதில் தகராறு ஏற்பட்ட நிலையில் தாய், மகளை தாக்கிய 2 பேர் கைது.

Update: 2024-02-17 07:07 GMT

சேலத்தில் வீடு அட்வான்ஸ் கொடுப்பதில் தகராறு - இரண்டு பேர் கைது

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. அவரது வீட்டில் மீனா (வயது 50) என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார். அந்த வீட்டில் தண்ணீர் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீனா வீட்டை காலி செய்வதாக கலைச்செல்வியிடம் கூறி உள்ளார். மேலும் வீட்டு அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அவர்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கலைச்செல்வியிடம், மீனாவின் மகள் ராதிகா அட்வான்ஸ் பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ராதிகாவை கலைச்செல்வி, அவரது கணவர் பாரதிதாசன் (43), தந்தை சேகர் மற்றும் உறவினர் ராம்கி (34) ஆகியோர் தாக்கினர். இதை தடுக்க வந்த மீனாவையும் அவர்கள் தாக்கினர். காயம்அடைந்த தாய், மகள் இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மீனா, ராதிகா ஆகியோரை தாக்கியதாக பாரதிதாசன், கலைச்செல்வி, சேகர், ராம்கி ஆகியோர் மீது வழக் குப்பதிவு செய்தனர். இதில் பாரதிதாசன், ராம்கி இருவரையம் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News