தியாகிகளுக்கு வீரவணக்கம்

செங்கல்பட்டில் வி.சி.க., சார்பில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Update: 2023-12-25 13:14 GMT
விசிக சார்பில் தியாகிகளுக்கு வீரவணக்கம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விசிக கட்சி சார்பில் மதுராந்தகம் நகரத்தில் டிசம்பர்-25 தஞ்சை கீழவெண்மணி போராளிகள் நினைவு நாளில் செங்கை மேற்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செய்யூர் பொன்னிவளவன் தலைமையில் வெண்மணி தியாகிகளின் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர செயலாளர் அ.கிட்டு பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர்கள் த.கதிர்வாணன்,ஏ.க.தயாநிதி, மலை.சமத்துவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாநில மாவட்ட தொகுதி ஒன்றிய நகர பேரூர் மற்றும் முகாம் நிர்வாகிகள் பேரறிவாளன்,அன்புச்செல்வன், பார்த்தசாரதி, தலித்எழில்மலை மகாதேவன், சம்பத், தினகரன் ஆசிரியர் மூர்த்தி, அத்திமானம் சீனு, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News