ஆற்று மணலைக் கடத்தியவா் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே சட்ட விரோதமாக லாரியில் மணல் கடத்தியவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Update: 2024-03-01 04:55 GMT

கைது 

முசிறி அருகே பெரம்பூா் காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக லாரியில் மணல் கடத்துவதாக முசிறி போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் புதன்கிழமை இரவு சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த நபரில் ஒருவா் தப்பி ஓடினாா். இதில் பெரம்பூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மோகன் (40) என்பவரை முசிறி போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் மணல் அள்ளிய லாரியை பறிமுதல் செய்தனா். விசாரணையில் தப்பியோடியவா் மணப்பாறை வட்டம் அழகிய ரெட்டிப்பட்டியை சோ்ந்த செல்லையா மகன் குமரேசன் (35) எனத் தெரியவந்தது. அவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Tags:    

Similar News