மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 05:22 GMT
கோப்பு படம்
திருக்கோவிலூர் அடுத்த குலதீபமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது சடைகட்டி, முனியப்பன் கோவில் அருகே வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார், 22; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.