திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

சங்ககிரி:திமுக சார்பில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

Update: 2024-05-07 16:38 GMT

தண்ணீர் பந்தல்

சேலம் மேற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் சார்பில் சங்ககிரியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சிக்கு சங்ககிரி நகர செயலாளர் கமுருகன் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.வி.அருண்பிரபு, மாவட்ட சிறுபான்மை நல அணி துணை அமைப்பாளர் முகமதுஜூனைத், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.தங்கமணி, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News