புத்தாம்பூரில் சன்மார்க்க சபை திருக்குட நன்னீராட்டு பெருவிழா!

புத்தாம்பூரில் சன்மார்க்க சபை திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது.

Update: 2024-02-12 05:53 GMT

புதுக்கோட்டை பூத்தாம்பூரில் சன்மார்க்க ஞானசபையின் நன்னீராட்டு பெருவிழாவில் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி சன்மார்க்க சபையின் நிர்வாகிகள் விழாவில் பங்கேற்றார்கள். புதுக்கோட்டை அருகே உள்ள புத்தம்பூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. சன்மார்க்க கொடியை சங்கத்தின் தலைவர் காத்தமுத்து ஏற்றினார்.

கோபுர கலசத்தில் சன்மார்க்க சங்கத்தின் மாநில தலைவர் மருத்துவர் அருள் நாகலிங்கம் தலைமையில் நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. சன்மார்க்க சங்கத்தின் ஞான ஜோதி ஏற்றப்பட்டு வழிபாடும் நடைபெற்றது. செயலர் முத்தையா சிறப்பு சொற்பொழிவுக்கு தலைமை வகித்தார். மருத்துவர் அருள் நாகலிங்கம் சொற்பொழிவு நிகழ்த்தினார். மாத்தூர் வள்ளலார் இல்ல மாணவர்களுக்கு வள்ளலார் புத்தகங்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் பொருளாளர் முனியமுத்து நன்றி கூறினார்.

Tags:    

Similar News