அதிமுகவுக்கு ஆதரவாக சண்முகநாதன் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக ஏரலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தீவிர வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-16 14:09 GMT

அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரல் பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் ஏரல் பஜார் முழுவதும் நடந்து சென்று வியாபாரிகளிடமும் பொது மக்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அதிமுக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் அழகேசன், பேரூராட்சி கழக செயலாளர் அசோக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் திருச்சிற்றம்பலம், துணைச் செயலாளர் ஏரல் ரத்தின சபாபதி, நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் நவநீதன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ். தினேஷ்,

முன்னாள் நகர செயலாளர் ஆத்திப்பழம், வார்டு செயலாளர்கள் சுப்பிரமணியன், கார்த்திகேயன், எஸ்பிஎம். ராஜா, சுந்தர், பெருங்குளம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் வேதமாணிக்கம், சாயர்புரம் பேரூராட்சி கழக செயலாளர் துரைசாமி ராஜா, புதுமனை கண்ணன், கொற்கைப்பட்டு,

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் விஜயன், மாவட்ட சிறுபான்மை அணி இணைச் செயலாளர் எப்ராயீம், பண்டாரவிளை பாஸ்கர், பால்துரை, சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் திருத்துவ சிங், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News