மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி: எஸ்பி பங்கேற்பு!

ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் எஸ்பி கிரண் ஸ்ருதி கலந்து கொண்டார்.

Update: 2024-05-26 14:00 GMT

ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் எஸ்பி கிரண் ஸ்ருதி கலந்து கொண்டார்.


ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தை சுற்றி குப்பைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் போடப்பட்டு இருந்தது.இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கூடுதல் எஸ்பி சரவணன், குணசேகரன் மற்றும் குமார் உள்பட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News