பள்ளி ஆண்டு விழா

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

Update: 2024-01-25 03:25 GMT

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா முன்னாள் ஆசிரியர் காலில் விழுந்து வணங்கிய ராஜ்ய சபா உறுப்பினர் ராஜேஷ் குமார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சி, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே ஆர் என் ராஜேஷ்குமார் எம்பி கலந்துகொண்டார். ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டி மற்றும் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பின் போது அவர்களுக்கு பரிசுகள் வழங்கி, காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார். இந்த ஆண்டு விழாவில், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News