ரூ. 28 லட்சத்தில் பள்ளி கட்டிடம் - எம்.எல்.ஏ திறப்பு

செய்யாறு அருகே முக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 28 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடத்தை எம்.எல்.ஏ ஜோதி திறந்து வைத்தார்

Update: 2024-01-30 05:25 GMT

பள்ளி கட்டிடம் திறப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே முக்கூர் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.பின்னர் முக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 28 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடத்தை எம் எல் ஏ ஓ ஜோதி ரிப்பன் வெட்டி கல்வெட்டை திறந்து வைத்தார். உடன் செய்யாறு ஓன்றிய குழு தலைவர் என்.வி.பாபு, அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஓன்றிய செயலாளர் ஞானவேல், முக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி, திமுக நிர்வாகிகள் பார்த்தீபன்,ரூபி.வெங்கடேசன், ஒப்பந்ததாரர்கள் ராஜ்குமார், குமரவேல், கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News