பள்ளி மாணவி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், வளையவட்டம் பகுதியில் உடல்நல குறைவால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-26 09:28 GMT

தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வளையவட்டம் ஆதிதிராவிடா் தெற்கு தெருவைச்சோ்ந்தவா் இளங்கோவன் மகள் மகேஸ்வரி (16). இவா், இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மகேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த மகேஸ்வரி வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது தாயாா் ஜெயசித்ரா அளித்த புகாரின் பேரில் திருவிடைமருதூா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயந்திர சரஸ்வதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.
Tags:    

Similar News