பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி,தூவாக்குடி அருகே 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-15 03:55 GMT
தற்கொலை
துவாக்குடி பரக்கத் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மகள் கஜமித்ரா (16) துவாக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் சேலைகள் தூக்கு போட்டு கஜமித்ரா தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ராஜ மித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.