புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Update: 2024-03-18 07:10 GMT
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் இயங்கிவரும் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் நாகப்பட்டினம், மருத்துவர் தெருவில் செயல்படும் கடையை நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன், காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் பூட்டி சீல் வைத்தனர்.