உங்களைத் தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு !

தென்காசி மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-13 04:56 GMT

ஆட்சித்தலைவர் 

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையின் கீழ் அனைத்து முதல் நிலை அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் தகவல். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் " என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், ஏதாவது ஒரு வட்டத்தினை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதற்கிணங்க தென்காசி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் " 19.06.2024 முற்பகல் 9.00 மணி முதல் 20.06.2024 முற்பகல் 9.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்  அவர்கள் தலைமையின் கீழ் அனைத்து முதல் நிலை அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News