சேலத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-27 12:53 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் நேற்று சேலம் கோட்டை மைதானம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் கணேஷ், செயலாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் இடைநிலை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News